புத்தளம் விவசாயிகளுக்கு நானோ நைட்ரஜன் உரம் வழங்கி வைப்பு

புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட விவசாய சங்கங்களுக்கு நானோ நைட்ரஜன் உரம் புத்தளம் கமநல சேவைகள் மத்திய நிலையத்தினரால் இன்று வழங்கப்பட்டது.

புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட, மணல்தீவு, செல்லக்கண்டல், கல்லடி, மத்திய அட்டவில்லு ஆகிய பகுதி விவசாயங்களுக்கு நானோ நைட்ரஜன் உரம் வழங்கப்பட்டதாக பிரதேச உத்தியோகத்தர் ப்ரியதர்ஷனி தெரிவித்தார்.

நானோ நைட்ரஜன் திரவ உரத்துடன் மேலதிகமாக சேதனப்பசளை, CFC எனப்படும் திரவ உரம் என்பன வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *