வவுனியா மேலதிக அரச அதிபருக்கு கோவிட் தொற்று உறுதி

வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவர் இன்று (22) முன்னெடுத்த துரித அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், மீண்டும் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *