இலங்கை – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
இந்த நிலையில், காலி கோட்டைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளை திசை திருப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயர் பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு முன்பாக உள்ள கோட்டைக்குள் யாரையும் பொலிஸார் அனுமதிக்காததால், ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
தாம் தமது குழந்தைகளுடன் காலி கோட்டையைப் பார்வையிட வந்த போதும் பொலிஸார் தமக்கு இந்த இடத்தைப் பார்வையிட அனுமதிக்கவில்லை என உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றும் இலங்கையின் அழகை கருத்திற்கொண்டு தாம் இலங்கைக்கு வந்ததாகவும் ஆனால் கோட்டை மதிலுக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படவில்லை, இது மிகவும் விரும்பத்தகாத செயல் எனவும் தெரிவித்துள்ளனர்.