சாவகச்சேரியில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஒருவரை, அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் செயற்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் உள்ள சந்தையொன்றில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர் ஒருவர் சென்று ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த ஊடகவியலாளரை இராணுவத்தினர் விசாரித்து அச்சுறுத்தியுள்ளனர்.
இதன்போது அவர் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையினை காண்பித்து, தான் ஒரு ஊடகவியலாளர் என்பதை உறுதிப்படுத்திவிட்டு மீண்டும் தனது கடமையில் ஈடுபட்டிருந்தார்.
இதையடுத்து, அவரை இராணுவத்தினர் புகைப்படம் பிடித்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளதாக பாதிக்கபட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.