உர நிறுவனங்களின் தலைவர்கள் இருவரை, நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் கூட்டத்திலிருந்து ஜனாதிபதி வெளியேற்றியுள்ளார்.
நாட்டில் விவசாயத்திற்குத் தேவையான உரத்தின் அளவு குறித்து வினவியபோது, அந்தத் தகவல்கள் அவர்களிடம் காணப்படவில்லை.
இதன் காரணமாக, குறித்த நிறுவனத்தின் தலைவர்களை அவையில் இருந்து ஜனாதிபதி அகற்றினார்.
அத்துடன் அவர்களை சபையை விட்டு வெளியேறி இது தொடர்பில் ஆராயுமாறு பணிப்புரை விடுத்தார்.
எனினும், குறித்த தகவல்களை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியதும் அவர்கள் சபையின் முன் வரிசையில் இருந்து அவையை விட்டு வெளியேறியுள்ளனர்.