தந்தை – மாணவியை மோதித் தள்ளிய இலக்கத் தகடு அற்ற பேரூந்து

யாழ்ப்பாணம் – தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோதியதில் தந்தையும், மாணவியும் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இருவரும், உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த மாணவி, கொக்குவில் இந்துக் கல்லூரி தரம் 8B ல் கல்வி கற்கும் ப.சரணிகா என தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *