கடலில் குதித்த பாசையூர்வாசி கரை திரும்பாமையால் பதற்றம்

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அண்மையில் உள்ள பூவரசந்தீவு கடற்கரையில் 22 ஆம் திகதி கஞ்சாவுடன் படகில் பயணித்த பாசையூரைச் சேர்ந்த ஒருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

22 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் கரையை அண்மித்த சமயம் கடற்படையினர் மறைந்திருந்து மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகில் பயணித்தவர் கடலில் குதித்துள்ளார்.

அவ்வாறு கடலில் குதித்தவர் இன்று அதிகாலை வரை வீடு திரும்பவில்லை.

வீடு திரும்பாதவர் கடலில் குதித்த இடத்தில் இருந்து 5 முதல் 10 நிமிடங்கள் நீந்தினால் கரை அடையும் தூ்த்திலேயே படகு இருந்தபோதும் இதுவரை கரை திரும்பாத காரணத்தினால் மீனவரின் கிராமத்தில் பதற்றம் நிலவுகின்றது.

இதேநேரம் இச் சம்பவத்தை மேலும் இரு மீனவர்கள் தெளிவாக அவதானித்தும் உள்ளதாக கூறப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *