திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களிலேயே 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் 25 முதல் 30 பேர் வரை பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
விபத்தில் காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.