நாட்டிற்கு மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன

நாட்டிற்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டுவரப்பட்டுள்ளன.

அதற்கமைய, 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த வாரத்தில் மாத்திரம் 1,900,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் எதிர்வரும் மாதம் முதல் வாராந்தம் தலா 3,000,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *