எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் மற்றுமொரு அடையாள வேலைநிறுத்தை முன்னெடுக்கவுள்ளதாக மருத்துவத் தொழில்களுக்கான கூட்டு பேரவை தெரிவித்துள்ளது.
கடந்த 17ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அரச அதிகாரிகளும் சுகாதார அமைச்சும் தமது கோரிக்கைகளுக்கு பதிலளிக்கத் தவறியதாகவும், கலந்துரையாடலுக்கான வாய்ப்பை வழங்கத் தவறியதாகவும் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 10, 000 ரூபா கொடுப்பனவு மற்றும் ஏனைய கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.