மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தது ஊர்காவற்துறை நீதிமன்றம்

மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஊர்காவற்றுறை பொலிஸார், 5 பேருக்கு எதிராகவும் நெடுந்தீவு பொலிஸார், ஒருவருக்கு எதிராகவும் மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்க தடை உத்தரவை பிறப்பிக்க கோரி, மனுவை தாக்கல் செய்தனர்.

இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட சிலர்  முன்னிலையாகி தடை உத்தரவை பிறப்பிக்க கூடாதென வாதம் செய்தனர்.

குறித்த மனு மீதான வழக்கினை விசாரணை செய்த ஊர்காவற்றுறை நீதவான், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *