பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெளதாரி முனை கல்முனை கடலில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெளதாரி முனை கல்முனை கடல் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சடலம் ஆணொருவரினது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரனைகளை பூநகரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.