மழைக்காலம் முடிவடைந்தவுடன் பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பம்! பசில் உறுதி

நாட்டில் மழைக்காலம் முடிவடைந்தவுடன் பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்இ

சந்தையில் காய்கறிகள்இ பழங்கள் மற்றும் கோழியிறைச்சி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை நான் கோடிட்டுக் காட்டினேன்இ எதிர்க்கட்சிகளும் அதே பிரச்சினைகளை கொண்டு வந்தன.

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதார துறையின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான முன்மொழிவுகள் கவனத்திற்க் கொள்ளப்பட்டு வரவு செலவுத் திட்டத்தில் சில திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் தயங்கமாட்டோம்.

பத்திர மோசடி நிதியை நாங்கள் பறிமுதல் செய்தது போல்இ வேறு ஏதேனும் ஊழல்கள் இருந்தால்இ அந்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய தயங்கமாட்டோம்.

இது போன்ற மோசடிகளை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்இ நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *