நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 24 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,182 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 557,172 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 527,528 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசின் அசட்டையே படகு விபத்துக்குக் காரணம்! – சபையில் ஹக்கீம் குற்றச்சாட்டு!