சாவகச்சேரியில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாவகச்சேரி நகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 36 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.

தனிப்பட்ட பகையே வாள்வெட்டுக்கான காரணம் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமானால் மாவீரர் நாளை செய்ய அனுமதிக்க வேண்டும்! சி.குகனேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *