படகு விபத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்துக! சஜித் வலியுறுத்து

கிண்ணியாவில் இடம்பெற்ற ‘படகுப் பாதை’ விபத்து சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும், கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி, நிமல் லன்சா அந்தப் பகுதியில் பாலத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிய போதும், அது தொடர்பான வேலைத்திட்டம் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இந்நிலையில், அங்கு மக்கள் பயணிப்பதற்கான படகுப் பாதை விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும்.

அதேபோன்று குறித்த படகுப் பாதை இயங்கிய முறை மற்றும் அதன் சட்டப்பூர்வ தன்மை ஆகியன குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார்.

வவுனியா வடக்கு தமிழ் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *