வொசிங்டனில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பாதுகாப்புக் கவுன்ஸிலின் மூத்த உறுப்பினர்கள் இருவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்டநிபுணர்கள், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கடந்த வாரம் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதிலும், பாதிக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதிலும் அமெரிக்கா அதிக ஈடுபடு மற்றும் பங்களிப்பை வழங்குவதற்கான முன்முயற்சிகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.






