சீயான் விக்ரமை தேடி வந்திருக்கும் ஜாக்பாட்: சம்மதம் சொல்வாரா?

பாகுபலி 2 படத்தை அடுத்து ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் உள்ளிட்டோரை வைத்து ராஜமவுலி இயக்கியிருக்கும் படம் ஆர்.ஆர்.ஆர். அந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

ஆர்.ஆர்.ஆர். படத்தில் வரும் நாட்டு பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகி விட்டது. சமூக வலைதளங்களில் திரும்பும் பக்கம் எல்லாம் நாட்டு பாடல் தான்.

ஆர்.ஆர்.ஆர். படத்தை அடுத்து மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவிருக்கிறார் ராஜமவுலி. அந்த படத்திற்காக வில்லனை தேடிய ராஜமவுலிக்கு விக்ரம் நினைவு வந்திருக்கிறது.

இதையடுத்து என் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறாராம்.

ராஜமவுலிக்கு விக்ரம் உடனே பதில் சொல்லவில்லையாம். ஆனால் ராஜமவுலியை மீண்டும் சந்தித்து பேசவிருக்கிறாராம்.

கெரியரை பொறுத்தவரை மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்புராஜின் மகான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் விக்ரம்.

மகானில் விக்ரமுடன் அவரின் மகன் த்ருவும் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் மகான் படம் தியேட்டர்களில் அல்லாமல் ஓடிடியில் வெளியாக உள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறது.

மேலும் அவர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வந்த துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *