ஆர்பிசி தக்கவைக்கப் போகும் 4 பேர்… மேக்ஸ்வெலுக்கு இடம் கிடைக்காதாம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இதுவரை ஒருமுறைகூட ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. அணியில் விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ், யுஜ்வேந்திர சஹால், முகமது சிராஜ் போன்ற முக்கிய வீரர்கள் இருந்தும் கோப்பை வெல்லாமல் இருந்து வருகிறது.

ஐபிஎல் 13ஆவது சீசனில் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிளே ஆஃப் எலிமினேஷன் சுற்றில் வெளியேறியது.

14ஆவது சீசனிலும் இதே கதை தான். இதனால், அடுத்த சீசனில் நிச்சயம் கோப்பை வென்றாக வேண்டும் என்ற துடிப்பில் அந்த அணி இருக்கிறது.

இதுவரை ஆர்சிபிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலி, 15ஆவது சீசன் முதல் வீரராக மட்டுமே அணியில் நீடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், புது கேப்டனாக லோக்கல் பாய் கே.எல்.ராகுல் செயல்பட அதிக வாய்ப்பிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டுமுதல் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள்வரை ஐபிஎலில் பங்கேற்கவுள்ளது. புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்படுவதால், அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.

இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் + ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், அணிகள் யார் யாரை தக்கவைக்கும், கழற்றிவிடும் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

“ஆர்சிபி அணி முதலில் விராட் கோலி, யுஜ்வேந்திர சாஹலைத்தான் தக்கவைக்கும். இருவரும் மிகமுக்கியமான வீரர்கள். அடுத்த இரண்டு இடங்களுக்குத்தான் போட்டி இருக்கிறது. அதில் தேவ்தத் படிக்கலின் இடம் கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

மீதமுள்ள ஒரு இடத்திற்கு முகமது சிராஜ், ஹர்ஷல் படேல் இருவருக்கும் இடம் போட்டி இருக்கிறது. இருவரும் சிறந்த பௌலர்கள்தான். நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

ஹர்ஷல் இந்த அணிக்காக ஒரு சீசனில் மட்டும் விளையாடியிருந்தாலும், அனைத்து போட்டிகளிலும் விக்கெட்டை எடுத்துக் கொடுத்திருக்கிறார்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “சிராஜும் சிறந்த பௌலர்தான். இதனால், அணி நிர்வாகம் இருவரில் ஒருவரை தக்கவைக்க வேண்டும் என்ற கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இப்படி 5 இந்திய வீரர்களுக்கு இடையில் போட்டி இருப்பதால், கிளென் மேக்ஸ்வெலை தக்கவைக்க விரும்ப மாட்டார்கள் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தேவ்தத் படிக்கல், விராட் கோலி இருவரும் சிறந்த துவக்கத்தை கொடுத்து வருகின்றனர். யுஜ்வேந்திர சஹால், ஐபிஎல் 14ஆவது சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்களில் மிரட்டலாக பந்துவீசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *