
மாத்தளை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் விவசாயிகளிடம் உள்ள துப்பாக்கிகள் தொடர்பான விபரங்களை திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட செயலாளர் கே.பெரேரா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
மாத்தளை மாவட்டத்தில் விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவட்ட செயலாளர் இந்தத் தகவலை தெரிவித்தார்.
விவசாய நடவடிக்கைகளுக்காக விவசாயிகள் பயன்படுத்தி வரும் துப்பாக்கிகளில் பல இதுவரை பதிவு செய்யப்படாமல் உள்ளது எனத் தெரியவந்துள்ளது.
இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத சுமார் 200 துப்பாக்கிகள் லக்கல பிரதேசத்தில் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பதிவு செய்யப்படாமல் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோத செயலாகும். எனவே, பதிவு செய்யப்படாத துப்பாக்கிகளைத் தேடிக் கண்டுபிடித்து அதனைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்தார்.
ஆறு வயதுச் சிறுமியை கடத்திச் சென்று துன்புறுத்திய இளைஞன் கொடிகாமம் பொலிஸாரில் மடக்கிப்பிடிப்பு!