இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகள் திறந்தே உள்ளன! பீரிஸ்

இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகள் திறந்தே உள்ளன. ஆனால் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு இதுவே ஒரே வழி என்பதை இலங்கை ஏற்காது. இதுவொரு மாற்று வழி மாத்திரமே என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை ஏன் இன்னும் சர்வதேச நாணய நிதியத்தை நாட வில்லை, கடுமையான நிபந்தனைகளா இதற்கு காரணம் என கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பீரிஸ் கூறியவை வருமாறு,

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதென்பது ஒரு மாற்று வழி மாத்திரமே. அங்கு இலங்கைக்கு எந்நேரமும் செல்லாம். கதவு திறந்தே உள்ளது.

எமது நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாடுகள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தை நாடவில்லை. ஏனைய சில மாற்று வழிகளும் உள்ளன. இலங்கையானது இந்த அழைப்பை ஏற்கவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை என்றார்.

அதேவேளை இது தொடர்பில் மேலதிக விளக்கத்தை வழங்கிய மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம்,

எமது நாடு பல தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளது. ஆனால் பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து எம்மால் மீள முடிந்ததா? அல்லது சர்வதேச நாணய நிதியத்தை நாடி பிரச்சினைகளை முழுமையாக தீர்த்துக்கொண்ட நாடுகள் எவை என்பதை, சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு கூறுபவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

மாத்தளையில் சட்டவிரோதமாக 200 துப்பாக்கிகள்: விபரங்களை திரட்டுமாறு பணிப்புரை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *