
ஜனநாயகம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க 110 நாட்டு பிரதிநிதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் முக்கிய மேற்கத்திய நட்பு நாடுகள் உட்பட ஈராக், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உட்பட 110 நாட்டு பிரதிநிதிகளுக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும்; அமெரிக்காவின் பிரதான போட்டியாளரான சீனா, தாய்வான் போன்ற நாடுகளுக்கு ஜோ பைடன் அழைப்பு விடுக்கவில்லை.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பீஜிங்கை மேலும் கோபப்படுத்தும் சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் டிசம்பர் 9-10 திகதிகளில் திட்டமிடப்பட்ட இணையவழி மாநாட்டில் இஸ்ரேல் மற்றும் ஈராக் மட்டுமே மத்திய கிழக்கு நாடுகள் என்ற வகையில் பங்கெடுக்கும் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.
அமெரிக்காவைப் போலவே நேட்டோவில் உறுப்பினராக உள்ள துருக்கியும் பங்கேற்பாளர்களின் பட்டியலிலிருந்து விடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் பாரம்பரிய அரபு நட்பு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்தான், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை அழைக்கப்படவில்லை.