வவுனியாவில் தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வவுனியா, பாவற்குளத்திற்கு தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சூடுவெந்தபுலவு பகுதியில் வசித்து வரும் தாய் ஒருவர் தனது பிள்ளைகளுடன் பாவற்குளம் குளத்திற்கு நீராடச் சென்றுள்ளார்.

இதன்போது 4 வயது சிறுவனை குளத்தில் நீராட விட்டு தாய் கரைக்கு வந்து திரும்பி பார்க்கும் போது, குளத்திற்குள் நீராடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, தாயார் அங்கு நின்றவர்கள் மற்றும் ஊரவரை அழைத்து சிறுவனை தேடிய போது சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டதையடுத்து, உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரியவருகிறது.

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியைச் சேர்ந்த அம்ஜத் என்ற 4 வயது சிறுவனே மரணமடைந்துள்ள நிலையில் இது தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *