மட்டு. கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் படகு கவிழ்ந்ததில் கடலில் வீழந்து காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை)   இரவு இடம்பெற்றுள்ளதுடன் படகு செட்டிபாளையம் கடல் கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திரைய்மடு சுவீஸ் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய  சுந்தரராஜா சுரேஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த மீனவர் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் இயந்திர படகில் தனியாக முகத்துவாரம் கடலில் மீன்பிடிப்பதற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடலில் இருந்து வலையை இழுக்கும் போது படகு கவிழ்ததையடுத்து அவர்கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளர்.

இதேவேளை கவிழ்ந்த படகு செட்டிப்பாளையம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாகவும் காணாமல் போனவரை கடற்படையினர் தேடிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *