வர்த்தமானி…

வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானியை சுமார் 7 மாதங்களின் பின்னர் இரத்து செய்வதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிவித்துள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய இரசாயன உரங்கள், களை கொல்லிகள் மற்றும் பீடைகொல்லிகளை இறக்குமதி செய்ய இன்று (24) முதல் தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம் (24) வெளியிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆயினும் அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லையெனவும், அரசாங்கத்தின் கொள்கை பசுமை விவசாயமே எனவும், சேதன விவசாயத்திற்கு மாத்திரமே நிவாரணங்கள் வழங்கப்படுமெனவும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகளில் அரசாங்க பாடசாலைகள் காணப்பட்ட போதிலும் தனியார் பாடசாலகளில் கல்வி கற்பதற்கான அனுமதி உள்ளது போல், திறந்த சந்தையில் இரசாயன உரங்கள், இரசாயன களைகொல்லிகள், இரசாயன பீடைகொல்லிகளை கொள்வனவு செய்யவும் அனுமதி வழங்கப்படுவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *