நிந்தவூர் பிரதேசத்தில் பாரிய ஆலமரம் சரிந்து விழுந்ததால் வாகன நெரிசல்; மின்சாரம் தடை

தெய்வாதீனமாக எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை
தற்போது பெய்து வரும் மழை காரணமாக, நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த ஆல மரம் இன்று (24) காலை முறிந்து வீழ்ந்ததால், இன்று காலை 7.30 மணி முதல் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், காலை முதல் நிந்தவூர் பிரதேசத்தில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததுடன், மாற்று உள் வீதியினூடாக போக்குவரத்துக்கள் இடம்பெற்றன. இருந்தாலும் உள் வீதிகளில் மிக நீண்ட வாகன நெரிசல் காணப்பட்டமையால், நிந்தவூர் வரலாற்றில் மிக மோசமான வாகன நெரிசலாக இது காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *