உதயன் – சஞ்சீவி பிரதம ஆசிரியர், ம.வ.கானமயில்நாதனின் உடல் தீயுடன் சங்கமம்!

உதயன் – சஞ்சீவி நிறுவுன ஆசிரியரும், பிரதம ஆசிரியருமான ம.வ.கானமயில்நாதனின் (வயது -79) திருவுடல் கோம்பயன்மணல் மயானத்தில் நேற்று பி.ப. 3.00 மணியளவில் தீயுடன் சங்கமமானது.

சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது வீட்டில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அதிகாலை காலமாகனியிருந்தார்.

அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. நேற்றுக் காலை 10 மணிக்கு கிரியைகள் இடம்பெற்றன. தொடர்ந்து அவரது வீட்டில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் அவரது உடல் உதயன் பணிமனைக்கு அஞ்சலிக்காக எடுத்து வரப்பட்டிருந்தது.

பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அத்துடன் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து கோம்பயன்மணல் மயானத்துக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அன்னாரது உறவினர் சிதைக்கு தீ மூட்டினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *