“கருத்து சுதந்திரம்” என்ற அடிப்படையில், சிங்கள எம்பீக்கள் பாராளுமன்றத்தில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் புண்படுத்தலாம். ஆனால் ஒரு தமிழ் எம்பி, தான் நம்பும் தனது கருத்தை சபையில் கூற முடியாதா..? என சிங்களத்தில் அரசு தரப்பை பார்த்து கேட்ட பாராளுமன்ற உனுப்பினர் வேலுகுமாரை, துணிச்சல் மிக்கவர் என பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் தனது முகப்புத்தகத்தில் புகழ்ந்துள்ளார்
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற சலசலப்பு தொடர்பில் முகப்புத்தகத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில், “புலிகளின் தலைவர் பிரபாகரன் மேதகு தேசிய தலைவர்” என்ற தமிழ் பதத்தை, தனது தமிழ் உரையில் பயன்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் எம்பி கஜேந்திரனை விடவும்,
அதை மறுத்து “புலிகளின் தலைவர் ஒரு பயங்கரவாதி, கொலைக்காரன், அட்டூழியக்காரன் (தக்கடியா..!). ஆகவே கஜேந்திரன் எம்பியின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து அகற்றுங்கள்” எனக் கூச்சல் எழுப்பி சண்டையிடும் சிங்களராஜாங்க அமைச்சர் சீதா அரம்பல, விமல் வீரவன்ச கட்சியின் “முஸ்லிம் பெயர் தாங்கிய” மொஹமட் முசாம்பில் எம்பி மற்றும் ஏனைய அரசு தரப்பு சிங்கள எம்பீக்களை விடவும்,
“கஜேந்திரன் எம்பி அவர் கருத்தை கூறுகிறார். அவருக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது. அதை நான் எப்படி தடை செய்ய முடியும்? நீங்கள் இதுபற்றி புகார் செய்கிறீர்கள் என்றால், நான் சபாநாயகரிடம் கூறுகிறேன். ஆனால் கஜேந்திரன் எம்பி யின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து அகற்ற நான் இப்போது உத்தரவிட மாட்டேன்.” என சுத்தமான சிங்களத்தில் மீண்டும், மீண்டும், உரக்க, உரக்க கூறுகின்ற, அந்த சந்தர்ப்பத்தில் சபைக்கு தலைமை தாங்குகின்ற, நம்ம தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) கண்டி எம்பி-ஜனநாயக மக்கள் முன்னணி பிரதிதலைவர் வேலு குமார்தான் இங்கே “அதிக துணிச்சல்கார பாராட்டுக்குரியவர்” என்பதை இங்கே கவனிக்க தவறாதீர்கள்..! என தெரிவித்துள்ளார்.