கைதடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதுண்டு தடம்புரண்ட ஹயஸ் வாகனம்!

யாழ். கைதடி வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் பாலத்துடன் மோதுண்டு தடம்புரண்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதடி வாசிகசாலையை இணைக்கும் வளைவில் உள்ள பாலத்தடி சந்தியில், யாழில் இருந்து கொழும்பை நோக்கி புறப்பட்ட ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பாலத்துடன் மோதுண்டு தடம்புறதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாலத்தடியில் சீரற்ற மழை வீழ்ச்சியால் இவ்வாறான விபத்து எற்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் எந்ததொரு உயிர்சேதங்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *