நல்லிணக்கம், மனித உரிமைகளில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது: ஐ.நாவின் உதவி செயலரிடம் பீரிஸ் தெரிவிப்பு!

உள்நாட்டு பொறிமுறைகளால் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறியுள்ளது.

இலங்கை வந்துள்ள ஐ.நாவின் அரசியல், சமாதானத்தை கட்டியெழுப்பும் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கான உதவி செயலாளர் காலித் கியாரி நேற்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பயங்கரவாத தடை சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டு செயல்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்தைய முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

அத்துடன், தாமாக ஏற்றுக்கொண்ட சர்வதேச கடமைகளுக்கு அமைவாக நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார் என்று கூறப்பட்டது.

இந்த சந்திப்பில் காலித் கியாரியுடன் ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் – ஹம்டி மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலரும் பங்கேற்றிருந்தனர்.

தாவடியில் விபத்தை ஏற்படுத்திய பஸ் இலக்கத்தகடு இன்றி எப்படி பயணித்தது? சபையில் சிறிதரன் கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *