இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்ராலினை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அரச முறை பயணமாக தமிழ்நாட்டிற்குச் சென்று பலரையும் சந்தித்து வருகின்றார். இதன் ஒரு அங்கமாகவே தமிழ்நாடு முதலமைச்சரையும் சந்தித்துள்ளார்.
இதன்போது, இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பாகவும், இரு தரப்பு மக்களுக்கிடையே தொடர்புகளை வலுப்படுத்தல் சம்மந்தமாகவும் பேசப்பட்டது.