முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கெருடமடு, மன்னகண்டலை சேர்ந்த 65 வயதுடைய அழகன் கோபால்ராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
நேற்று இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இவர் திரும்பி வராத நிலையில், அவரைத்தேடி அதிகாலை 02 மணிக்கு உறவினர்கள் சென்றவேளை, காட்டுப்பகுதியில் இறந்து கிடந்துள்ளார்.
இதுதொடர்பில், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்திய இழுவைப் படகுகள் உள்நுழைந்ததால் தொழிலுக்கு செல்லாமல் திரும்பி சென்ற இலங்கை மீனவர்கள்!