ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை இரத்து செய்ய தயாராகின்றது அரசாங்கம்?

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய களனி பாலத்தினை திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டு வந்து அதனை நிறைவேற்ற தயார் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பொறுப்பு கூற வேண்டும் என கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *