பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்புப்பட்ட சமீபத்திய ஆண்டுகளில் பதிவான மிக மோசமான விபத்து இதுவாகும்.

நேற்று (புதன்கிழமை) குளிரான நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்தவர்களின் சடலங்கள், பிரான்ஸின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக பிரான்ஸின் உட்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் அறிக்கை தெரிவிக்கின்றது. இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர்.

புலம்பெயர்ந்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ஜெரால்ட் டார்மான் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, பிரான்ஸ் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 31ஆக கணக்கிட்டனர். ஆனால் பின்னர் அந்த எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யப்பட்டது.

‘இந்த மரணத்தால் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்துள்ளதாக’ பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கூறியுள்ளார். மேலும், கடக்க முயற்சிப்பதில் இருந்து மக்களைத் தடுக்க பிரான்ஸுக்கு மேலும் அழைப்பு விடுத்தார். கடத்தல் கும்பல்கள் ‘கொலையிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கின்றன’ என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரித்தானியா உள்நாட்டு ஆதாயத்திற்காக இந்த பிரச்சினையை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

ஆங்கில கால்வாய், உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றாகும் மற்றும் நீரோட்டங்கள் வலுவாக உள்ளன.

மனித கடத்தல்காரர்கள், மிகவும் உடையக்கூடிய, ஊதப்பட்ட படகுகள் மூலம் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்கின்றனர். இந்த படகுகள், அலைகளின் தயவில் பிரித்தானிய கரையை அடைய முயற்சிக்கின்றன. இது மிகவும் ஆபத்தான கடற்பயணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *