பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் 14 பேர் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நகரசபை உறுப்பினர்கள் 14 பேர் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.

குறித்த சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த த.தே.மக்கள் முன்னணியை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது குறித்த உறுப்பினருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, குறித்த சபை அமர்வில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்த சுகாதாரத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொற்றுறுறுதி செய்யப்பட்ட உறுப்பினர் உள்ளிட்ட நேற்றைய சபை அமர்வில் பங்கேற்ற 14 உறுப்பினர்கள் மற்றும் சாரதி ஒருவர் என 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சபை அமர்வில் பங்கேற்ற நகரசபை உத்தியோகத்தர்கள் மூவர் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடவில்லை என அறியமுடிகிறது.

இது குறித்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நகரசபை உத்தியோகத்தரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினருக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *