இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை நாட்டில் 5,275 பேருக்கு எலிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 706 பேர் இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக படியாக எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், காலி மாவட்டத்தில் 643 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 600 பேரும், கேகாலை மாவட்டத்தில் 418 பேரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் 8,579 பேர் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஊடகவியலாளர்கள் தற்போது வேறு தொழிலை நாடிச் செல்கின்றனர்! சபையில் சித்தார்த்தன் சுட்டிக்காட்டு!