மாவீரர் தின நிகழ்வுகளுக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த தடையுத்தரவுக்கு எதிராக எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாளை குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான விசாரணை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி காவல்துறையினரால் 51 பேருக்கான தடையுத்தரவு பெறப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன. குறித்த துயிலுமில்லங்களில் கடந்த 2017 மற்றம் 18ஆம் ஆண்டுகளில் மாவீர்நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.