தடைகளை மீறி யாழ் பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ். பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் இடம்பெற்று வருகின்ற மாவீரர் வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் பல்கலைக்கழக மாணவர்களினால் மாவீரர் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

முழந்தாளில் மாணவர்கள் இருந்து வீரமறவர்களுக்கு தமது ஆத்மார்த்தமான அஞ்சலி செலுத்தினர்.

குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினரும், பொலிசாரும், இராணுவ, பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்துகின்ற வகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *