யாழ். கொடிகாமம் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று மதியம் கொடிகாமம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை. எனினும் டிப்பர் வாகனம் முன்பகுதி சேதமடைந்துள்ளது.
ஒளிச் சமிக்ஞை விளக்கு முடிவடையும்போது இரண்டு டிப்பர் வாகனங்கள் வேகமாக சந்தியை கடக்க முயற்சித்துள்ளன.
இதன்போது, யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி வேகமாக முன்னே பயணித்த டிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியது.
இந்நிலையில், பின்னே வந்த மற்றுமொரு டிப்பர் வாகனம் நிறுத்த முற்பட்டபோதும் கட்டுப்பாட்டை இழந்து சந்தை கட்டடத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

