கிண்ணியா நகரசபை மேயரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவை விபத்து தொடர்பில் கிண்ணியா நகரசபை மேயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று மாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையிலேயே அவரை எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.