208 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது

பெரியகுளம் கட்டைகாடு பகுதியில் 208 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி  பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைகாடு பகுதியில்  சட்டவிரோதமான முறையில்  கசிப்பு  உற்பத்தி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத கசிப்பு  உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது

இதையடுத்து, கிளிநொச்சி மது ஒழிப்பு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக கசிப்பு  உற்பத்தியிலீடுபட்ட சந்தேகநபர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 208 போத்தல்  கசிப்பும், 3000 லீற்றர் கோடாவும், கசிப்பு  உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் பொலிசாரால் மிட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *