வவுனியாவில் தொடர் மழை காரணமாக 3 வீடுகள் சேதம்: 115 பேர் பாதிப்பு

வவுனியாவில் தொடர் மழை காரணமாக 31 குடும்பங்களை சேர்ந்த 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. பெய்துவரும் மழையினால் வவுனியா பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களை சேர்ந்த 11 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 66 பேரும், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 3 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வவுனியா மாவட்டத்தில் 31 குடும்பங்களை சேர்ந்த 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேலதிக தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *