இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதியதில், இளம் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து, யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் தெற்கு- மண்டான் வீதியில் சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்தில், வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய எஸ்.சிவகலா என்பவரே படுகாயமடைந்தவராவர்.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.