யாழில் 195 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிப்பு

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 195 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்

தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதி பணிப்பாளர் சூரியராஜ் மாலை நான்கு மணிவரையான நிலவரம் தொடர்பாக தெரிவிக்கையில்.

நேற்று முதல் பெய்தமழை மற்றும் அதிக காற்று காரணமாக 195 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் காரைநகர் பகுதியில் 2 குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனரெனவும் தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *