ஐந்து நீர்த்தேக்கங்களின் 30 வான் கதவுகள் இன்று (25) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகள் ஐந்து அடி வரையும், ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் எட்டு அடி வரையும், இரண்டு வான் கதவுகள் ஆறு அடி வரையும், இரண்டு வான் கதவுகள் நான்கு அடு வரையும், நான்கு வான் கதவுகள் இரண்டு அடிவரையும் தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வரையும் , இரண்டு வான் கதவுகள் 6 ஆங்குலம் வரையும் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் ஒரு அடி வரையும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நான்கு அடி வரையும் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தெதுரு ஓயா, ராஜாங்கன, இங்கினிமிட்டிய, அங்கமுவ மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களுக்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கிரம உத்தியோகத்தர்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.