பரு. நகர சபையின் பாதீடு வெற்றி!

பருத்தித்துறை நகர சபை வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபையின் வரவு -செலவுத் திட்டத்தை தவிசாளர் சபையில் நேற்றுமுன்வைத்தார். அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மேலதிக ஒரு வாக்கால் வரவு நிறைவேற்றப்பட்டது.
அதற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 5 பேரும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேச்சை ஆகியவற்றின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ஆறு பேரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.
அதனால் வரவு -செலவுத் திட்ட வாக்கெடுப்பில் சமநிலை காணப்பட்டதனால் உள்ளூராட்சி மன்றச் சட்டத்துக்கு அமைய தவிசாளர் தனது வாக்கை ஆதரவாக அளித்து ஒரு மேலதி வாக்கால் அது நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பின்போது கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் உடல்நலக் குறைவுடன் காணப்பட்டுள்ளார்.
வாக்கெடுப்பின் பின்னர் அவர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *