ஹெரோய்ன் விற்ற 11 வய­துச் சிறுமி! -யாழில் அதிர்ச்­சி சம்­ப­வம்

யாழ்ப்­பா­ணம், பொம்­மை­வெ­ளிப் பகு­தி­யில் உயிர்­கொல்­லி­யான ஹெரோய்ன் போதைப்­பொ­ருளை விற்­பனை செய்த குற்­றச்­சாட்­டில் 11 வய­துச் சிறுமி ஒரு­வர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

சிறு­மியை போதைப் பொருள் விற்­ப­னைக்கு ஊக்­கு­வித்த குற்­றச்­சாட்­டில், சிறு­மி­யின் தாயைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

சிறு­மி­யின் தந்தை போதைப்­பொ­ருள் விற்­பனை செய்த குற்­றத்­துக்­காக சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்­றார்.

தாயு­டன் தங்­கி­யுள்ள சிறுமி போதைப்­பொ­ருள் விற்­ப­னைக்கு ஊக்­கு­விக்­கப்­பட்­டுள்­ளார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­கள் பொலி­ஸா­ரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

Leave a Reply