குளத்தில் குளித்த சிறுவன் மூழ்கிச் சாவு!

வவுனியா, பாவற்குளத்தில் தாயுடன் நீராடிய 4 வயதுச் சிறுவன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

சிறுவன் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தவேளை, தாயார் கரைக்குச் சென்றபோது சிறுவனைக் காணவில்லை. அங்கு நின்றவர்களையும் அழைத்து தேடியபோதும் சிறுவன் சடலமாகவே மீட்கப்பட்டார்.

இதனையடுத்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சடலத்தை அடக்கம்செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். உளுக்குளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *