
இன்றைய சபை அமர்வில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல் பீரிஸ் தெரிவிக்கையில்:
கடந்த 31 ஆம் திகதி முதல் நாடாளுமன்ற உறுப்பினர் 13 பேருக்கு கருத்துக்களை வழங்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இது திட்டமிட்ட சதி.இதற்கான இப்படியான ஓர வஞ்சக நிலை.பொருளாதாரம் பற்றி கதைக்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் நசுக்கியுள்ள 13 பேரில் பேராசிரியர்கள்,சட்டத்தரணிகள்,என பலர் உள்ளனர்.
கருத்துச் சுதந்திரம் இல்லை.ஆகவே இந்த விடயத்தை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப் போகின்றோம்.அனைத்துப் பாராளுமன்ற அமைப்பின் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பலருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
13 பேருக்கு பாராளுமன்றில் கருத்துச் சுந்தந்திரம் இல்லை.சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.இதற்கான பலனை நீங்களே அறிவியுங்கள் என்றார்.
பிறசெய்திகள்





