
வட மாகாணத்தில் கமத்தொழில், வன ஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று கமத்தொழில் வன ஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் இன்று (22) இடம்பெற்றது.
கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற வாழ்வாதார காணிகள், வதிவிடக் காணிகள், விவசாய செய்கை, மேய்ச்சல் தரைகள், சத்துணவு திட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கைகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானால் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் வனவளத்துறையின் ஆளுகைக்குள் இருக்கின்ற விவசாய மற்றும் மேய்ச்சல் தரைக்கு உகந்த இடங்களை விடுவிப்பது தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சாதகமான முடிவுகளும் எட்டப்பட்டது.
மேலும் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்





